கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கவுண்டனூரைச் சேர்ந்த பிரதீப்(40), கனகராஜ்(41), முத்துசாமி(48), ரஞ்சித்(25), கார்த்திக்(25), மணிகண்டன்(24), சிவானந்தம்(30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2500 ரூபாய் பணம், இரண்டு சேவல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.