6 வயது சிறுவனுக்கு செல்போன் போனில் ஆபாசப் படங்களைக் காட்டி, இயற்கைக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவின் ஆலப்புழாவில் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு சேர்தலா போலீசார் பதிவு செய்த போக்சோ வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆளில்லாத வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆபாசப் படங்களை காட்டி சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டான். சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.75,000 அபராதமும் விதிக்கப்பட்டது.