உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத்  ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் மர்ம நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.