ராஜஸ்தான் மாநிலம் ஜோதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலையில் அதிக அளவு புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் அந்த வீட்டில் சென்று பார்த்த போது எரிந்த நிலையில் சடலங்கள் கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த வீட்டில் பூனரம்-பன்வாரி தம்பதி அவர்களது மருமகள் தபு மற்றும் ஆறு மாத பேரக்குழந்தை என நான்கு பேர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முதலில் நான்கு பேரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அதன் பிறகு சடலங்கள் ஒன்றாக வைக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேலும் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.