மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் ரயில் பொதுப் பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் திட்டத்தை ரயில்வே துறை தொடங்கவுள்ளது.

பயணிகளுக்கு வசதியாக எகனாமி மீல்ஸ் (ரூ.20), ஸ்நாக் மீல்ஸ் (ரூ. 50) என இரு பேக்கேஜ்களை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. பிளாட்பாரங்களில் பொது பெட்டிகளுக்கு அருகில் அமைந்துள்ள நீட்டிக்கப்பட்ட சேவை கவுண்டர்கள் மூலம் வழங்க விரைந்து ஏற்பாடு செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.