மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார்.

மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது. மணிப்பூருக்காக  இதயம் துக்கத்தில் கனக்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்தது  மன்னிக்கப்படாது. எந்த குற்றவாளியும் தப்பமாட்டார்கள். கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.