கடலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இவர் ஏழை எளிய மக்களுக்காக தனது 91 வயது வரை மருத்துவ சேவையாற்றியுள்ளார். இவருக்கு மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவரின் சிகிச்சையால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இவர் நேற்று உயிரிழந்தார். இவரை மரணம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு மக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.