கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் ரூ.10க்கு உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் 2 இந்திரா கேன்டீன்கள் தொடங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கூடிய விரைவில் காலை உணவு 5 ரூபாய்க்கும், மத்திய உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.