பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பாக டெல்லியில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
வெள்ளத்திற்குப் பிந்தைய நிலவரம், தமிழகத்திற்கு உதவிகள் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வெள்ள நிலவரம், பாதிப்புகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வெள்ள நிவாரணம், வெள்ள நிலவரம் நிவாரண பணிகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழக அரசினுடைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபடுவது, மத்திய அரசின் உதவிகள், கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய மீட்பு படை வீரர்கள் தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிடுவதற்காகவும், வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்வதற்காகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வருகை குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.