தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் அந்தப் பெண்ணை 5 பேய்கள் பிடித்திருப்பதாக கூறி சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் வீட்டிற்கு வந்து நடந்துவற்றை தனது கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று கண்டித்ததோடு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டனர். அந்தப் பெண் தனது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க அவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த அந்த போலி சாமியார் மகாராஷ்டிராவிற்கு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் போலி சாமியாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!
Related Posts
317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்…. இரங்கல்…!!!
சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன்(33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை.…
Read moreஉலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read more