கணினி வளர்ச்சி நிலையின் உச்சமாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இந்தத் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நுட்பமான எந்திரங்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களைப் போன்றே செயல்பட வைக்க முடியும். தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்டம்பர் 13ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற மாநாட்டு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.