தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் அந்தப் பெண்ணை 5 பேய்கள் பிடித்திருப்பதாக கூறி சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் வீட்டிற்கு வந்து நடந்துவற்றை தனது கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று கண்டித்ததோடு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டனர். அந்தப் பெண் தனது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க அவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த அந்த போலி சாமியார் மகாராஷ்டிராவிற்கு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் போலி சாமியாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!
Related Posts
“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…
Read moreகனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more