தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் தலா 5 லட்ச ரூபாய் வீதம் 40 லட்ச ரூபாயை குணால் தாசிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கேட்டபோது குணால் சிலரை மட்டும் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்று வேலை தொடர்பான ஆவணங்களை காண்பித்த போது அவை போலியானது என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் தர்மபுரி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.