திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி ஆறுமுகம் வளர்க்கும் ஆடு அதே பகுதியில் வசிக்கும் பார்த்தசாரதி என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் கோபமடைந்த பார்த்தசாரதி தனது உறவினர்களுடன் இணைந்து ஆறுமுகத்திடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பார்த்தசாரதி உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.