தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியில் புதிதாக தினசரி சந்தை கட்டும் பணி மற்றும் தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. இது குறித்து உதவி கலெக்டர் மகாலட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், நகராட்சி தலைவர் கா.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தை வியாபாரிகளுக்கு கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அந்த வியாபாரிகளுக்கு கூடுதல் பேருந்து நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் இதற்கு குத்தகைதாரர்கள், வணிக சங்கப்பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பின் குலுக்கல் முறையில் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.