ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் காணகுந்தூர் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கர்நாடக மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி கொண்டு லாரியில் காணகுந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியில் காண குந்தூரை சேர்ந்த 3 பேரும் வந்தனர்.

இந்நிலையில் திக்காரை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் யோகேஷ் உட்பட 4 பேரும் காயமடைந்தனர். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.