கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இருகூர் தீபம் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் அதிக அளவு சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் எங்கள் நிறுவன இணையதளத்தை பின் தொடர்ந்தால் பணம் கிடைக்கும் என தெரிவித்தார்.

அதன்படி சதீஷ் செய்தவுடன் அவரது வங்கி கணக்கிற்கு 150 ரூபாய் வந்தது. இதனை தொடர்ந்து மர்ம நபர் கூறியபடி பல தவணைகளாக சதீஷ் 14 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் பணமும் அதற்கான கமிஷனும் வரவில்லை. இதுகுறித்து சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.