தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் நிலையில் இன்று இந்த நான்கு மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

தொடர்ந்து நான்கு மாநிலங்களில் 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறிய அவர், தெலுங்கானாவில் மட்டும் பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.