தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேரு உள்ளிட்ட திமுக அமைச்சர்களின் முன்னிலையிலேயே, செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என துரை வைகோ கண்ணீர் மல்க பேசினார். ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியலில் நுழைந்தேன் என தெரிவித்தார்.