தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டு மதியம் அதிமுகவினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் இதுபோல செய்து அதிமுகவினர் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதை மனதில் வைத்து நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் மனுவில் கையெழுத்திட்டு சிறப்பு வழிபாடு செய்து பிறகு மதியம் 12 முதல் ஒரு மணி வரை புதன் ஓரையில் அவர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.