திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் தகனம் செய்துவிட்டு வெள்ளகோவில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சிலருக்கும், உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதனால் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், நம்பி ராமலிங்கம், வெள்ளகோவிலை சேர்ந்த தர்மர் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெள்ளகோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.