திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பற்றி செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட சமூக நலவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இதில் பெண் குழந்தைகளின் பிறப்பை கொண்டாடுவதற்கும், அவர்களின் உயர் கல்வி மற்றும் திறனை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளை பற்றிய சமூகத்தின் மனநிலை மாற்ற சிறப்பு இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் துறை வாரியாக நடத்திட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸ் துறை, வேலைவாய்ப்பு துறை, மருத்துவ துறை, கல்வித்துறை சார்பாக கூடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் எனவும் செய்லாக்க குழு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.