சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரையும் விடாமல் கடிப்பதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வெறிநாய் கடித்ததால் அந்தோணிபுரம் ஓடைப்பகுதியை சேர்ந்த ராணி, மார்ட்டின், ஆனந்த், 2 சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தெருநாய்களின் தொந்தரவால் பொதுமக்களும், வாகனம் ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.