திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டியில் தைப்பூச தினத்தை முன்னிட்டு குண்டூர் கருப்பசாமி கோவில், பழனியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் காளைகளை அவிழ்த்து விட அனுமதி கொடுக்கவில்லை.

மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அனுமதி இன்றி காளைகளை அவிழ்த்து விட்ட ராமச்சந்திரன், அவரது சகோதரர் பாலமுருகன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் கட்டப்பட்டது.