தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாசர். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக 40 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் நாசர் பெயரில் போலி எக்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டு பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்படுவது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தெரிய வந்த நிலையில் அது  தொடர்பாக அவர்கள் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் நடிகர் நாசர் பெயரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இது போன்ற போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.