தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் மிஷ்கின். இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கோவிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள் என்று கூறினார். இயக்குனர் மிஷ்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு போனால் மன நிம்மதி கிடைக்கும். ஆனால் தியேட்டருக்கு சென்று தற்போது வரும் தமிழ் படங்களை பார்த்தால் பிபி தான் ஏறுது என பலரும் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் புது டிரஸ் போட்டுக்கிட்டு பர்பூயும் அடித்துக்கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு போய் படம் பாருங்கள் என சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.