நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி மன்ற உறுப்பினர் பர்வீன் பானு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும்  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாணவர்களை கல்வியியல் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல் பள்ளிகளில் கழிவறைகள் அமைத்து தர வேண்டும். வருகிற மார்ச் மாதம் பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.