சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில் ரிஷிகேஷ் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருவதும், மற்ற இரண்டு பேரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் 3 பேரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், 2 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.