சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு பேருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இலையில் இரவு நேரத்தில் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் போரூர் சுங்க சாவடி அருகே சென்றபோது குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கண்டக்டருக்கு ஆதரவாக பேசிய பயணிகளிடமும் அந்த நபர் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் அந்த நபரை கீழே இறக்கி விட்டார். இதில் கோபமடைந்த அவர் மீண்டும் வாக்குவாதம் செய்ததால் ஓட்டுனர், கண்டக்டர் மற்றும் பயணிகள் இணைந்து அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.