சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலை காந்தி நகரில் சுரேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குணசீலனை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் குணசீலன் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு உட்பட 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேகா வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென வந்த குணசீலன் தகராறு செய்து கட்டை மற்றும் பீர் பாட்டிலால் சுரேகாவை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து பொதுமக்கள் திரண்டு வந்ததால் குணசீலன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் காயமடைந்த சுரேகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குணசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.