சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் ஸ்கூட்டரில் சுற்றி திரியும் வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர் கஞ்சா ஒரு பொட்டலம் 50 ரூபாய் என்று விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த யாசர்அராபத்(36) என்பது தெரியவந்தது. மேலும் வாட்சப் மூலம் கஞ்சா கேட்டு வரும் தகவலை அடிப்படையாக வைத்து ஸ்கூட்டரில் சென்று யாசர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் யாசர்அராபத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3,500 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.