சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது. ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புதிய வைரஸ் சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தலாக இருக்க கூடும் என்றும் தெரிகிறது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா அறிகுறிகளை ஆய்வு செய்வதை இந்த ஆய்வின் நோக்கம் என்ற சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.