செங்கல்பட்டு அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், இந்திய கிறிஸ்துவ ஊழியர் ஐக்கியம் (ICMC) அமைப்பின் தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு நடிகர் விஜய்க்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விஜய் நிச்சயம் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும், அவரே தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போகும் தலைவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

​தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் தங்களது அமைப்பு வலுவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய ராஜ்குமார், தேர்தல் களத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பல கூட்டமைப்புகளை ஒன்றிணைக்கப் போவதாகவும் உறுதியளித்தார். “நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்” என்ற அவரது இந்த வெளிப்படையான ஆதரவு, வரவிருக்கும் தேர்தலில் தவெக-விற்கான சிறுபான்மையின மக்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.