முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்ட்ரைவ்கள் பேருந்து நிலையம், பூங்கா ஆகியவற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

மேலும் ரேவண்ணாவின் குடும்பத்தை சேர்ந்த பலர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தற்போது பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.