வெளிநாட்டினர் இந்திய திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாது.