சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் செந்தில் என்பவரும் டெம்போ வேனில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் மினி டெம்போ சாலைகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் செந்தில் கோகுல் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.