சேலம் மாவட்டம் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே புகழ் பெற்ற கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கும், தயாரிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதனையடுத்து தங்க கவசம் ரத்தினகிரி கிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும், தாயாரும் வலம் வந்தனர். வடக்கு புறம் அமைந்திருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாளும், தாயாரும் பல்லக்கில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்