திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பூரிக்கமானி மிட்டா ஊராட்சியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகராஜ், சேகர், ராஜா என்ற சகோதரர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தனது அண்ணன் இறந்ததை அறிந்ததும் அதிர்ச்சியில் ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரும் உயிரிழந்தார். அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.