திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனால் போலீசாரும் மீட்பு படையினரும் சீரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஏரல், திருச்செந்தூர் பகுதிகளில் சேதுமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.