கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது தெரியவந்தது. இருவரும் ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.