கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.