கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more