கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம் ஜி.எம் நகர் நீர்ப்பண்ணை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோட்டைபுதூர் பகுதியில் வசிக்கும் தொழிலாளி அபுதாஹிர்(51) மற்றும் ரவி(58) என்பது தெரியவந்தது.

இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சா, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.