கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவன் உள்பட இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.