கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் மூன்றாவது தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் குடிபோதையில் ஆனந்த் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஜானகிராமன் கண்டித்து வீட்டை காலி செய்யுமாறு கூறினார்.

இதில் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஆனந்த் ஜானகிராமனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஜானகிராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்த்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.