கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் கூலி வேலை பார்க்கும் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்து அருள் தனது வீட்டில் வைத்து பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.