கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்றதும் டெம்போவில் செம்மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் போலீசார் டெம்போ டிரைவர் ரோல், ஆப்ரேட்டர் ஆபிஸ் ஆகியோரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இந்திரங்களை பறிமுதல் செய்து தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர்.