மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார்.bதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் ரஜினி புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார். அந்த அறை முழுவதும் ரஜினி நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் இருக்கும்.

மேலும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ரஜினியின் படத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் 3 அடி உயரத்தில் ரஜினியின் கற்சிலையை வடிவமைத்து வாங்கி யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்துவது போன்று பூஜைகள் செய்தார். அவருக்கு உறுதுணையாக பெற்றோரும், மனைவியும் இருப்பதாக கார்த்திக் கூறியுள்ளார்.