கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய தள்ளப்பாடி அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். இதுகுறித்து தட்டி கேட்டபோது அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்தார்.

இதனால் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையிள் அவர் ஊத்தங்கரையைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்துருவை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.