ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழி பாளையம் செங்காட்டுவலசு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ், 16 வயது இரண்டு சிறுவர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர்.