கரூர் மாவட்டத்தில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துசாமி காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு தனது ஊருக்கு அருகே இருக்கும் பாலத்தின் தடுப்பு கட்டையில் படுத்து தூங்கினார். அப்போது நிலைதடுமாறி முத்துசாமி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.